Pages

Thursday, March 10, 2011

பேஸ்புக் கோடீஸ்வரர்கள்!

2011ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக்கோடு தொடர்புடைய ஏழு பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சுகர்பேர்க் இந்தப் பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.

இவரின் சொத்துப் பெறுமதி 13.5 பில்லியன் டொலர்கள். கடந்தாண்டின் நான்கு பில்லியன் பெறுமதியிலிருந்து இது 238% அதிகரித்துள்ளது.

பேஸ்புக் இணை ஸ்தாபகர் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் 420வது இடத்தில் உள்ளார். இவரின் சொத்துப் பெறுமதி 2.7 பில்லியன் டொலர்கள். இவருக்கு வயது 26.

இவர்தான் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் வயதில் இளையவர். மேலும் முதற் தடவையாக இவர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இவர்களோடு சேர்த்து பேஸ்புக்குடன் தொடர்புடைய ஏழு பேர் இம்முறை உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்

17 வயது 22 அங்குல உயரம்

இவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார்.


ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும்.

தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.


தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.

நடக்கவும் நிற்கவும் சிரமப்பட்டாலும் கூட தனது வருங்கால புகழை எண்ணி மகிழ்ச்சியடைகின்றார் இவர்.


இவர் தனது பெற்றோர் மற்றும் மூன்று இளைய சகோதரர்களுடன் வசித்து வருகின்றார். ஆனால் சகோதரர்கள் மூவரும் நல்ல உயரமானவர்கள்.

பிலிப்பைன்ஸின் நோர்டே மாநிலத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இவர் வசித்து வருகின்றார்.

13,11 மற்றும் 6 வயதான இவரின் இளைய சகோதரர்கள் பாடசாலை செல்லும் போது இவர் மட்டும் தாயுடன் வீட்டிலேயே இருந்து விடுகின்றார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவரைப் பெற்றோர் இடுப்பில் தூக்கியே சுமக்கின்றனர்.

தற்போது உலகின் குள்ளமான மனிதராக இருப்பவர் நேபாளத்தின் கஜேந்திர தாபா மாகா இவரின் உயரம் 26.4 அங்குலம்

வல்வை கொத்தியாலி​ல் 17 அடி நீளமான சுறா.. (படங்கள் இணைப்பு)



வல்வெட்டித்துறை கொத்தியால் பிரதேச ஆள்கடல் மீனவர்களின் வலையில் 17 அடி நீளமுள்ள சுறா மீன் பிடிபட்டது.


இன்று மதியம் 2.00 வலையுடன் கொத்தியால் கரைக்குக் கொண்டுவரப்பட்டது. மீன உயிருடன் இருப்பதால் விலை பெசப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும்


அதிக விலைக்கு கேட்க்கும் வியாபாரிகளுக்கே தாம் விற்ப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தாம் மீனை உயிடுடன் வான் பிரதேசத்தில் வைத்திருப்பதகவும்


வேறு பிரதேசங்களில் இருந்து வியாபாரிகள் வர்வதாகவும் தெரிவித்தனர்.

அந்த பிரதேசம் திருவிழா போல் காட்ச்சியலிக்கின்றது.


Sunday, March 6, 2011

சு.ப .தமிழ்ச்செல்வனின் எதிரி மரணம்! (படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்களை நடத்தி இருந்த விமானியே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் இழந்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.


இவரின் பெயர் மொனாத் பெரேரா. விமானப் படையில் லெப்டினண்ட் பதவி வகித்தவர்.


காலி மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டவர். எனினும் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான நீர்கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்து இருக்கின்றார்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இவரின் பங்கு மிகவும் காத்திரமானதாக இருந்து உள்ளது.

கோழிக்குஞ்சு, வாத்து, பூனைகளை பராமரிக்கும் நாய்

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் பூனை, கோழிக் குஞ்சு, வாத்து, முயல் போன்றவற்றிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக நாய்கள் காணப்படும். எனவே பொதுவாக வீட்டுரிமையாளர்கள் நாயிடமிருந்து இந்த பிராணிகளை தள்ளியே வைப்பார்கள். ஆனால், பிரிட்டனில் ஒரு நாய் இந்த செல்லப்பிராணிகளை அன்புடன் பராமரிக்கும் விசித்திரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ரொட்வீலர்ஸ் வர்க்கத்தைச் சேர்ந்த டேவ் என பெயரிடப்பட்ட இந்த நாய் முயல் வாத்து, கோழி, பூனை போன்றவற்றை தாயைப்போன்று பராமரித்து வருகின்றது.


டேவிற்கு 6 வயது இருக்கும் போது அதன் உரிமையாளர் அமன்டா கொலின்ஸ் தனது வீட்டிற்கு முயலொன்றைக் கொண்டு வந்தார். <அம்முயலைக் கண்டவுடன் டேவ் அதன் அருகில் சென்று அம்முயலை தனது நாவினால் சுத்தப்படுத்த ஆரம்பித்தது என்று 25 வயதான அமன்டா குறித்து தெரிவித்துள்ளார். இவர் பிளக்பூல் நகரில் செல்லப் பிராணிகள் கடையொன்றை நடத்தி வருகிறார்.இந்த நாயும் முயலும் எப்போதும் இணைந்தே காணப்படும். அவை ஒன்றாகவே உறங்குகின்றன. அதேவேளை ஒருவருக்கொருவர் உணவை பங்கிட்டுக்கொள்வதையும் நான் பார்த்திருக்கின்றேன் என்கிறார் அமண்டா.

பின்பு நான் வாத்துக்குஞ்சுகளை கொண்டு வந்து சேர்த்தேன். அந்த நாய் முயலுடன் நடந்துகொள்வதைப் போல் வாத்துக்குஞ்சுகளுடன் நடந்துகொள்ள மாட்டாது என நான் நினைத்தேன். ஆனால், அது அந்த குஞ்சுகளிடம் சென்று அவற்றின் தலைகளை நாக்கினால் தடவி விட்டது. அவற்றுக்கு நீந்துவதற்கு பழகிக்கொள்ள முடியும் என்பதற்காக நான் சிறுவர்களுக்கான நீச்சல் தடாகத்தில் நீரை நிரப்பி வைத்தேன். டேவ், நீச்சல் தாடகத்தின் அடிக்கு செல்ல வாத்துக்குஞ்சுகள் அதன் மீது ஏறிக்கொள்ளும். அவற்றுக்கு நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு சிரமம் ஏற்பட்டால் அந்த நாய் அவற்றை தனது முதுகில் ஏற்றிக்கொண்டு வெளியில் வந்து விடும் என அவர் மேலும் கூறுகிறார்.

டேவ் தற்போது 7 வாத்துகள், 5 முயல்கள், 13 கோழிக்குஞ்சுகள் மற்றும் 5 முயல்கள், 13 பூனைகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றது. இதில் புதிதாக பொறி;க்கப்பட்ட கோழிக் குஞ்சுகளை இன்னும் கணக்கிடவில்லை.பிரிட்டனின் மிகவும் உந்துதல் அளிக்கும் நாயாக டேவ் போட்டியொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலம் நடத்தப்பட்ட இப்போட்டியில் 600 நாய்கள் கலந்துகொண்டன. டேவ் 265,515 வாக்குகளைப் பெற்றது

எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் தடை!

வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் இன் சிலையை மீண்டும் வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் இன் சிலையொன்று ஏற்கனவே இங்கு இருந்தது.


யுத்த காலத்தில் இது முற்றாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

வல்வெட்டித்துறை - தொண்டமானாறு வீதியில் இருந்த இந்தச் சிலையை திருத்தி மீண்டும் நிறுவுவதற்கு இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மன்றத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் இதைச் செய்ய விடாமல் இந்தப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது ஐ பேட் 2: சாதனை படைக்குமா?